/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடைபாதை ஆக்கிரமித்து கடை வைத்தவர் கைது
/
நடைபாதை ஆக்கிரமித்து கடை வைத்தவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம்காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தியால்பேட்டை காந்தி வீதியில் புதுவை பாரதியார் கிராம வங்கி எதிரில் உள்ள நடைபாதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பழக்கடை வைத்து நடத்தி வந்த கருவடிக்குப்பம் அனந்தா நகரை சேர்ந்த சுப்ரமணியன் 69, என்பவர் மீதுபோலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.