sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்றவர் கைது

/

ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்றவர் கைது

ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்றவர் கைது

ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்றவர் கைது


ADDED : ஏப் 01, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரையில் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மந்தைவெளி பகுதியில் உள்ள பங்க் கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பதாக போலிசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், குப்புசாமி தலைமையிலான போலீசார் நேற்று மதியம் மடுகரைக்கு சென்று அந்த பங்க் கடையில் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது பங்க் கடையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்த ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான 75 கிலோ ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் மடுகரை தங்கராஜ் நகரை சேர்ந்த துரைராஜ் 33, என்பவரை கைது செய்து, அவர் போதைப்பொருளுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் நிலையம் அழைத்து வந்த துரைராஜ்யை, போதைப்பொருள் எங்கே இருந்து வருகிறது யார் அனுப்புகிறார்கள் என்று தீவிர விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us