sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டியவருக்கு வலை

/

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டியவருக்கு வலை

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டியவருக்கு வலை

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டியவருக்கு வலை


ADDED : ஏப் 04, 2025 04:14 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் அந்நிறுவனத்தில் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் கல்வி கற்பித்து வருகிறார்.

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 7-ந் தேதி அவரை தொடர்புகொண்டு குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வீடியோக்களை தனியாக அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளார். அப்போது வீடியோக்களை அனுப்பி வைக்கவில்லை என்றால், அந்த பெண்ணின் புகைபடத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வீடியோக்களை, மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகும் மர்ம நபர் அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us