/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணியை தாக்கிய நபருக்கு வலை
/
கர்ப்பிணியை தாக்கிய நபருக்கு வலை
ADDED : ஏப் 11, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் வடிவேலன், 46. இவர் கர்ப்பிணியாக உள்ள தனது மகளை அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து விட்டு, நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து கொண்டிந்தார்.
அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த முகேஷ் என்பவர், கர்ப்பிணி பெண்ணை அவதுாராக பேசினார். அதை தட்டி கேட்ட தந்தை வடிவேலன், தாய், கர்ப்பிணி பெண் ஆகியோரை முகேஷ் தாக்கினார். வடிவேலன் புகாரின் பேரில், ஓதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, முகேைஷ தேடி வருகின்றனர்.

