/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மண்டல அபிேஷக பூஜை அன்னதானம் வழங்கல்
/
மண்டல அபிேஷக பூஜை அன்னதானம் வழங்கல்
ADDED : பிப் 22, 2026 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காக்காயன் தோப்பு முத்துமாரியம்மன் கோவில் மண்டல அபி ேஷக பூஜையில், ரவி பாண்டுரங்கன் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அரியாங்குப்பம் தொகுதி, காக்காயன் தோப்பு, முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 48 நாட்கள் மண்டல அபிஷேக பூஜை விழா நடந்து வருகிறது.
இதில், 20வது நாளில், ஜீவா குடும்பத்தினர் நடத்திய அபிஷேக பூஜையில், சிறப்பு அழைப்பாளராக ரவி பாண்டுரங்கன் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொது மக்களுக்கு பரோட்டா மற்றும் வெண் பொங்கல் பிரசாதமாக வழங்கினார். ரவி பாண்டுரங்கனுக்கு கோவில் நிர்வாகம் மரியாதை செய்தனர்.

