sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் அமைச்சரின் காஸ் ஏஜன்சியில் கையாடல்

/

முன்னாள் அமைச்சரின் காஸ் ஏஜன்சியில் கையாடல்

முன்னாள் அமைச்சரின் காஸ் ஏஜன்சியில் கையாடல்

முன்னாள் அமைச்சரின் காஸ் ஏஜன்சியில் கையாடல்


ADDED : பிப் 12, 2025 04:06 AM

Google News

ADDED : பிப் 12, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்னாள் அமைச்சரின் காஸ் ஏஜன்சியில் பணம் கையாடல் செய்ததாக, டெலிவரி பாய் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சொக்கநாதன்பேட்டை, வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள். காங்., முன்னாள் அமைச்சர். மூலக்குளத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.

இதில், வாழைக்குளம், அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ரத்தினம், கடந்த 20 ஆண்டுகளாக டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு பணியில் இருந்து நின்று விட்டார்.

கடந்த ஆண்டு சிலிண்டர் டெலிவரி செய்த பணம் ரூ. 1 லட்சம் மற்றும்19 கிலோ எடை கொண்ட 27 சிலிண்டர், 5 கிலோ எடை கொண்ட 4 சிலிண்டர்களை ஒப்படைக்காமல் ஆனந்தகுமார் ரத்தினம் தலைமறைவாகி விட்டதாகவும், அவர், வர்த்தக காலி சிலிண்டர்களில், வீட்டு உபயோக சிலிண்டர்களின் எரி வாயுவை நிரப்பி சாலையோர கடைகளுக்கு விநியோகம் செய்ததாக பெத்தபெருமாள் ரெட்டியார்பாளையம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

நீதிமன்ற பரிந்துரைப்படி அனந்த்குமார் ரத்தினம் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us