/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரக்காலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
/
மரக்காலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 10, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : மடுகரை கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி உடனுறை மரக்காலீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. .
அதையொட்டி, கோவிலில் நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. நேற்று மூலவர் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக காமராஜர் நகரில் உள்ள செல்வவிநாயகர், எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் தனபூபதி, கோவில் நிர்வாகி கலியபெருமாள் செய்திருந்தனர்.