sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆரோவில்லில் இன்று மாரத்தான் ஓட்டம்

/

ஆரோவில்லில் இன்று மாரத்தான் ஓட்டம்

ஆரோவில்லில் இன்று மாரத்தான் ஓட்டம்

ஆரோவில்லில் இன்று மாரத்தான் ஓட்டம்


ADDED : பிப் 17, 2024 11:13 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில்லில், இன்று 18ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.

இது குறித்து ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி, துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் ஒற்றுமை, உடல் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று மற்றும் கிரவுன் சாலை திட்டப்பணிகள் காரணமாக மாரத்தான் ஓட்டம் நடத்தப் படவில்லை.

14வது ஆண்டாக நாளை (இன்று 18ம் தேதி) மாரத்தான் ஓட்டத்திற்கு ஆரோவில்லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விசிட்டர் சென்டர் எதிரில் காலை 6:15 மணிக்கு, போட்டி துவங்குகிறது.

இப்போட்டியில் 689 பெண்கள், 2293 ஆண்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 42 கி.மீ., பிரிவில் 151 பேரும், 21 கி.மீ., பிரிவில் 1,287 பேரும், 10 கி.மீ., பிரிவில் 1544 பேரும், 5 கி.மீ., பிரிவில் குழந்தைகள், பெற்றோர்கள், முதியவர்கள் பங்கேற்கிறார்கள்.

போட்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில் வாசிகள், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என 2,982 பேர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us