sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்  

/

ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்  

ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்  

ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்; மார்ட்டின் குழுமம் வழங்கல்  


ADDED : டிச 16, 2024 05:39 AM

Google News

ADDED : டிச 16, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க மார்ட்டின் குழுமம் முடிவு செய்தது.

இதில் 70 ஆயிரம் குடும்பத்திற்கு, அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்பு விநியோகிக்கும் பணி துவங்கியது.

நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று நடந்தது. மார்ட்டின் குழுமத்தின் இயக்குநர் லீமாரோஸ் மார்ட்டின் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர், நிவாரண பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். ஜான்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், அங்காளன், மற்றும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டனர்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில்;

பெஞ்சல் புயலால் புதுச்சேரி மற்றும் தமிழகம் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி துவங்கி உள்ளது. தற்போது 20 லாரிகளில் நிவாரண பொருள் வந்துள்ளது. இன்னும் 60 லாரிகள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி முழுதும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்.






      Dinamalar
      Follow us