/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள் வழங்கி மே தின விழா கொண்டாட்டம்
/
நலத்திட்ட உதவிகள் வழங்கி மே தின விழா கொண்டாட்டம்
UPDATED : மே 01, 2026 07:26 PM
ADDED : மே 01, 2026 07:24 PM

புதுச்சேரி: தொழிலாளர் முன்னேற்ற கழகம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி மே தினம் கொண்டாடப்பட்டது.
தொழிலாளர் தினத்தையொட்டி, தி.மு.க.,வின் புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், பெரியார் போக்குவரத்து பணிமனை, பி.ஆர்.டி.சி., பணிமனை, திருவள்ளுவர் பஸ்டாண்ட், சுதேசி பஞ்சாலை, மாஸ் ஓட்டல், பழைய சட்டக் கல்லுாரி, கதிர்காமம், வில்லியனுார், மூலகுளம், புது பஸ்டாண்ட், போட்ஹவுஸ் உள்பட 37 இடங்களில் சங்க கொடி ஏற்றப்பட்டது.
பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு, கொடியேற்றி, தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர் கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், சக்திவேல், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் கொண்டனர்.

