sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

/

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை


ADDED : ஜன 31, 2024 01:17 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில்எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி கடற்கரை அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பெரியகடை போலீசார் சென்று, வாலிபர் உடலை மீட்டு விசாரித்தனர்.

கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கவுதமன் மகன் நிதிஷ், 23; என்பதும், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்த நிதிஷ் என்பது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு நேற்று முன் தினம், தேர்வு நடந்தது. அதற்காக வழக்கம்போல் காலை 7:45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அவரது கல்லுாரி பை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள உணவகத்தில் கிடந்தது.

தேர்வு பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us