sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எம்.ஜி.ஆர்., - ஜெ., படத்துடன் போஸ்டர்; பா.ஜ.,வினர் 3 பேர் 'சஸ்பெண்ட்'

/

எம்.ஜி.ஆர்., - ஜெ., படத்துடன் போஸ்டர்; பா.ஜ.,வினர் 3 பேர் 'சஸ்பெண்ட்'

எம்.ஜி.ஆர்., - ஜெ., படத்துடன் போஸ்டர்; பா.ஜ.,வினர் 3 பேர் 'சஸ்பெண்ட்'

எம்.ஜி.ஆர்., - ஜெ., படத்துடன் போஸ்டர்; பா.ஜ.,வினர் 3 பேர் 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 06, 2024 03:24 AM

Google News

ADDED : மார் 06, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுடன் போஸ்டர்களை ஒட்டிய பா.ஜ.,வினர் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்களுடன் 'வாக்களிப்போம் தாமரைக்கே' என்ற வாசகத்துடன் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை பா.ஜ.,வினர் ஒட்டி இருந்தனர்.

இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்று இருந்தது.

தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகி போட்டோவுடன், பல இடங்களில் புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இந்த போஸ்டரில், பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் எம்.ஜி.ஆர்., தொப்பி அணிந்திருப்பது போன்ற போட்டோவுடன், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்கள் இடம் பெற்று இருந்தது. மேலும், 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என்ற வாசகமும் அச்சிடப்பட்டு இருந்தது.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுடன் பா.ஜ.,வினர் போஸ்டர்கள் ஒட்டியதற்கு தமிழக, புதுச்சேரி அ.தி.மு.க., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மலிவு அரசியல் செய்வதாக பா.ஜ.,வை விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டிய பா.ஜ., நிர்வாகிகள் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில பா.ஜ., பொதுச் செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநில பா.ஜ., தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றாமல், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் அனுமதியின்றி செயல்பட்ட, விஜயபூபதி, ராக் பெட்ரிக், பாபு ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர்.

மேலும், இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us