sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்

/

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்


ADDED : ஏப் 05, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலை மத்திய பிரிவு சார்பில் மைக் பிரசாரம் செய்யப்பட்டது.

புதுச்சேரி நகரப் பகுதி வீதிகளில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாய்க்கால்கள் மீது அமைக்கப்படும் கட்டடங்களின் படிக்கட்டுகளால் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறாமல் முடங்கி விடுகிறது.

அதையடுத்து, கட்டடம் மற்றும் சாலை மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமையில் மிஷன் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, காராமணிக்குப்பம், முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளது.

அதையொட்டி நேற்று அப்பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வலியுறுத்தி மைக் பிரசாரம் செய்தனர்.






      Dinamalar
      Follow us