தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி

ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி

ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி


ADDED : மே 20, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில், நுாறு அடி நீளத்தில் தேசிய கொடியேந்தி மாணவர்கள் பேரணி சென்றனர்.

ஆபரேஷன் சிந்துாரில், ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி லாஸ்பேட்டை விமானம் நிலையம் அருகே நேற்று மாலை 5:00 மணியளவில் மாணவர்கள் பேரணி சென்றனர்.

இந்த பேரணியில், ஸ்கேட்டிங், என்.சி.சி., மாணவர்கள், தாகூர் கலைக் கல்லுாரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நுாற்றுக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டர்.

பேரணியில், நுாறடி நீளம், 8 அடி அகலம் கொண்ட தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சாந்தி நகர் உள்ளிட்ட முக்கிய வழியாக, மீண்டும், விமான நிலையத்தில் பேரணி நிறைவுபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us