sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி

/

ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி

ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி

ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி


ADDED : மே 20, 2025 06:19 AM

Google News

ADDED : மே 20, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில், நுாறு அடி நீளத்தில் தேசிய கொடியேந்தி மாணவர்கள் பேரணி சென்றனர்.

ஆபரேஷன் சிந்துாரில், ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி லாஸ்பேட்டை விமானம் நிலையம் அருகே நேற்று மாலை 5:00 மணியளவில் மாணவர்கள் பேரணி சென்றனர்.

இந்த பேரணியில், ஸ்கேட்டிங், என்.சி.சி., மாணவர்கள், தாகூர் கலைக் கல்லுாரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நுாற்றுக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டர்.

பேரணியில், நுாறடி நீளம், 8 அடி அகலம் கொண்ட தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சாந்தி நகர் உள்ளிட்ட முக்கிய வழியாக, மீண்டும், விமான நிலையத்தில் பேரணி நிறைவுபெற்றது.






      Dinamalar
      Follow us