/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனதின் குரல் நிகழ்ச்சி 23ம் தேதி ஒலிபரப்பு
/
மனதின் குரல் நிகழ்ச்சி 23ம் தேதி ஒலிபரப்பு
ADDED : பிப் 20, 2025 06:22 AM
புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி ஒலிபரப்பாகிறது.
இது குறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும், மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இதனை தொடர்ந்து உடனடியாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு மனதின் குரலாக ஒலிப்பாகும்.
மேலும் இந்த மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பு மனதின் குரலாக மீண்டும் மறு ஒலிபரப்பாக அன்றிரவு 8:00 மணிக்கு செய்யப்படும்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலை வரிசை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.