/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர்வெல் அமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
போர்வெல் அமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஏப் 09, 2025 03:47 AM

திருக்கனுார் : தேத்தாம்பாக்கம், அமட்டன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியில் போர்வெல் அமைக்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, தேத்தாம்பாக்கம் அமட்டன் குளம் இருளர் குடியிருப்பு பகுதியில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க, பொதுப்பணித்துறை மூலம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை கிராம குடிநீர்த் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், பா.ஜ., பிரமுகர்கள் சிவக்குமார், ஜெயக்குமார், சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.