ADDED : நவ 13, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; லாஸ்பேட்டை ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கும் பணியை அமைச்சர் திருமுருகன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டிற்கு முன்பு மூடப்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தீபாவளி பண்டிகையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் பணி நடந்து வருகிறது.
லாஸ்பேட்டை அசோக் நகர், ரேஷன் கடையில், இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் பணியை குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடையில் அரிசி சர்க்கரை வழங்கியதிற்கான பதிவு செய்யும் புத்தகங்களை சரிபார்த்தார். மேலும், அரிசியின் தரத்தையும் ஆய்வு செய்தார்.