sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீன்பிடி துறைமுகம் பணி; அமைச்சர் பார்வை

/

மீன்பிடி துறைமுகம் பணி; அமைச்சர் பார்வை

மீன்பிடி துறைமுகம் பணி; அமைச்சர் பார்வை

மீன்பிடி துறைமுகம் பணி; அமைச்சர் பார்வை


ADDED : ஜூன் 05, 2025 07:35 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்; வீராம்பட்டினத்தில் 57 கோடி ரூபாயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை, அமைச்சர் லட்சுமிநாராயணன் பார்வையிட்டார்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் முகத்துவாரத்தில், 57 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த துறைமுகத்தில், 160 விசைப் படகுகள், 200 பைபர் படகுகள் நிறுத்தும் அளவிற்கு பணிகள் நடந்து வருகிறது.

மேலும், படகுகள் பழுதுநீக்கும் மையம், கேண்டீன், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், அதிநவீன கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், 1.20 கோடியில், மீனவர்கள் பயன்பெறும் வகையில்,பெட்ரோல், டீசல், பங்கு அமைக்கப்படுகிறது.

அங்கு நடந்து வரும் கட்டுமான பணியை, அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று பார்வையிட்டார். அப்போது, பாஸ்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us