அரசு பள்ளியில் நாப்கின் தானியங்கி இயந்திரம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
அரசு பள்ளியில் நாப்கின் தானியங்கி இயந்திரம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 25, 2026 06:49 AM

புதுச்சேரி: கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாப்கின் தானியங்கி இயந்திரத்தை அழகானந்தம் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
பெற்றோர், ஆசிரியர், நிர்வாகிகள் நிதி உதவியுடன் நாப்கின்ஸ் வெண்டிங் மெஷின் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டு திறப்பு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் மோகன்பிரசாத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக அழகானந்தம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தானியங்கி நாப்கின் இயந்திரத்தை இயக்கி வைத்தார். பள்ளி மாணவிகள் இரண்டு ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தி ஒரு நாப்கினைப் பெற்றுக் கொள்ளலாம். இரண்டு ரூபாய் நாணயமும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் இரண்டு ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொண்டு நாப்கினை தானியங்கி இயந்திர மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளி மாணவிகளின் சுகாதார மேம்பாட்ட்டை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கதிர்காமம் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
