ADDED : ஆக 26, 2025 06:46 AM

அ நிறம் | அளவு
திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் ரமணா நகரில் ரூ.39.16 லட்சம் செலவில் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் இப்பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
