நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள மரகதவல்லி உடனுறை மரக்காளீஸ்வர் கோவிலில், நேற்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலை 10.00 மணிக்கு மரக் காளீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு சோமவாரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.