ADDED : பிப் 05, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் தைமாத சஷ்டி வழிபாடு நடந்து.
நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வீற்று அருள்பாலித்து வரும் செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் தை மாத சஷ்டி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை சுவாமிக்கு இளநீர், பால், தேன் கொண்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
மாலை 6.00 மணிக்கு மகா அபி ேஷகம் தொடர்ந்து தீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.