UPDATED : ஆக 20, 2026 05:33 PM
ADDED : ஆக 20, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற தாயை காணவில்லை என மகன் போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் செல்வம் மனைவி மாரியம்மாள், 60; இவர் கடந்த 6ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து, அவரது மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
