sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மலையேற்ற வீராங்கனை அமைச்சரிடம் வாழ்த்து

/

மலையேற்ற வீராங்கனை அமைச்சரிடம் வாழ்த்து

மலையேற்ற வீராங்கனை அமைச்சரிடம் வாழ்த்து

மலையேற்ற வீராங்கனை அமைச்சரிடம் வாழ்த்து


ADDED : அக் 30, 2025 06:52 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: இமயமலையில் அட்வான்ஸ் செகண்ட் வெலல் மலை ஏறும் பயிற்சி முடித்த மலையேற்ற வீராங்கனை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற் றார்.

புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் திவ்யா,29. மலையேற்ற வீராங்கனையான இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகரத்தின் கீழ் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங்கில் உள்ள தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் மலையேறுதல் மற்றும் பனிப்பாறை பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும், மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள கார்டியன் கிரிபெர்மி மலையேறுதல் நிறுவனத்தில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பாறை ஏறுதல் பயிற்சியையும் முடித்துள்ளார்.

ஐரோப்பா கண்டம் ரஷ்யாவில் உள்ள 5,642 மீட்டர் உயரம் கொண்ட மலையான மவுண்ட் எல்ப்ரஸ் மலையை ஏறி சாதனை படைத்தார்.

தொடர்ந்து இவர், இமயமலையில் அட்வான்ஸ் செகண்ட் லெவல் மலை ஏறும் பயிற்சி முடித்துள்ளார். அதனை இந்திய மலை ஏறும் ராணுவ பிரிவு அதிகாரிகள் அங்கீகரித்து, பேட்ஜ் வழங்கியுள்ளனர்.

ராணுவ அதிகாரிகளால் பேட்ஜ் பெற்ற வீராங்கனை திவ்யா, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.






      Dinamalar
      Follow us