/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால்- - பேரளம் பாதையில் ரயில் இயக்க வைத்திலிங்கம் எம்.பி, மத்திய அமைச்சரிடம் மனு
/
காரைக்கால்- - பேரளம் பாதையில் ரயில் இயக்க வைத்திலிங்கம் எம்.பி, மத்திய அமைச்சரிடம் மனு
காரைக்கால்- - பேரளம் பாதையில் ரயில் இயக்க வைத்திலிங்கம் எம்.பி, மத்திய அமைச்சரிடம் மனு
காரைக்கால்- - பேரளம் பாதையில் ரயில் இயக்க வைத்திலிங்கம் எம்.பி, மத்திய அமைச்சரிடம் மனு
ADDED : மார் 10, 2026 04:32 AM

காரைக்கால்: காரைக்கால்- பேரளம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் எம்.பி., வைத்திலிங்கம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் திரு நள்ளாறு- பேரளம் அகல ரயில் பாதைத் திட்டம் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சோவை துவங்கப்பட்டது . ஆனால் தற்போது பயணிகள் ரயில் இயக்கவில்லை இதனால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் ரயில் இயக்க காரைக்கால் தொடர் வண்டி பயணிகள் நல சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
இதன் அடிப்படையில் நேற்று காங்.கட்சி சார்பில் புதுடில்லியில் எம்.பி., வைத்திலிங்கம் மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து காரைக்கால்- பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்கவேண்டும். மேலும் காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக ரயில்சேவைகளை துவங்க வேண்டும் என கூறி இதற்கான மனுவை எம்.பி., வைத்திலிங்கம் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வழங்கினார்.
மத்திய அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

