ADDED : செப் 16, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காளான் வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி லெனின் வீதி, குயவர்பாளையத்தில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளான் வளர்ப்பு 10 நாட்கள் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 21ம் தேதி துவங்குகிறது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விவசாயத்துடன் கூடிய சிறந்த தொழில் பயிற்சியாகும். ஊரக பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
