sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காளியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை

/

காளியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை

காளியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை

காளியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை


ADDED : மே 01, 2025 07:01 AM

Google News

ADDED : மே 01, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் அருகே காளியம்மன், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில், காளியம்மன், காமாட்சி அம்மன், சப்தகன்னிகள் கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

அதையொட்டி, கடந்த 29ம் தேதி முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை நடந்தது.

தொடர்ந்து, கடம் புறப்பாடாகி காலை 10:25 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிள்ளை தைக்கால் சையத்ஷா ரஹமத்துல்லா தர்கா டிரஸ்டி சையத் சகாப் தலைமையில் இஸ்லாமியர்கள் அம்மனுக்கு பழங்கள், பட்டு உள்ளிட்ட சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்துவந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us