ADDED : நவ 27, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : பைக்கை கடனாக கேட்டு எடுத்து சென்று, மாயமானவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை, கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 24. இவர், வீடு கட்டி கொடுக்கும் காண்ராக்டரிடம்,வேலை செய்து வருகிறார். அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்காயந்தோப்பில்,வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், அங்கு இருந்த சவுந்தர்ராஜனின் பைக்கை (பி.ஒ. 05, எச்.7152) அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரிடம் நைசாக பேசி, அரியாங்குப்பம் கடைக்கு சென்று உடனே வருவதாக கூறி, வாங்கி சென்றார்.வெகு நேரம் ஆகியும் வரவில்லை. சந்தேகமடைந்த அவர், பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பைக்குடன்,மாயமான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

