sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'லேப்டாப் விசாரணையை எதிர்கொள்ள தயார்' : நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி

/

'லேப்டாப் விசாரணையை எதிர்கொள்ள தயார்' : நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி

'லேப்டாப் விசாரணையை எதிர்கொள்ள தயார்' : நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி

'லேப்டாப் விசாரணையை எதிர்கொள்ள தயார்' : நாராயணசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி


ADDED : பிப் 10, 2024 06:23 AM

Google News

ADDED : பிப் 10, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடந்த காங்., ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் வெளியேறியதற்கு அப்போதைய முதல்வர் நாராயணசாமி தான் காரணம் என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி உப்பளம் தொகுதி, புனித மத்தியாஸ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் லேப்டாப் வழங்கினார். தொடர்ந்து மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

பின், அவர், கூறியதாவது:

என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியின் ஊழலை வெளியிடுவேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். எப்போதும் புலி வருது, சிங்கம் வருது என்று சொல்வது தான் அவரது வழக்கம். அவருடைய பேச்சை மக்கள் ஒரு பொருட்டாவே எடுத்துக் கொள்ளுவதில்லை. நாங்கள் வெற்றி பெறும்போது அவர் தெரிந்து கொள்வார்.

லேப்டாப்பில் ஊழல் நடந்தது என, கூறியுள்ளார். அவர் சிலவற்றை கேட்டு தெரிந்து கொள்ளுவது நல்லது. லேப்டாப் மேக் இந்தியா திட்டத்தின் கீழ் ஜெம்போர்ட்லில் வாங்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஊழலும் நடக்கவில்லை.

பொய்யான தகவலை பரப்பி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். லேப்டாப் விவகாரத்தில் எத்தகைய விசாரணையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

அவர் மற்றவர்கள் மீது அபாண்டமாக பழி சொல்லி அரசியல் செய்ய நினைக்கிறார். அவரை அவர் கட்சியிலேயே மதிப்பதில்லை. டில்லியில் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பதில்லை.

எங்களது அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என, முதல்வர் பாராட்டுகிறார். அது அவருக்கு பொறுக்கவில்லை. கடந்த காங்., ஆட்சியில் அமைச்சர்களை அப்போதைய முதல்வர் நாராயணசாமி சுதந்திரமாக செயல்படவிடவில்லை. காங்., கட்சியில் இருந்து அமைச்சர்கள் உள்ளிட்ட எல்லோரும் வெளியேறியதற்கு அவர்தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us