sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலில் பதித்த கழிவு நீர் குழாய்களை 3 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் அதிரடி

/

கடலில் பதித்த கழிவு நீர் குழாய்களை 3 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் அதிரடி

கடலில் பதித்த கழிவு நீர் குழாய்களை 3 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் அதிரடி

கடலில் பதித்த கழிவு நீர் குழாய்களை 3 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் அதிரடி


ADDED : பிப் 02, 2025 06:50 AM

Google News

ADDED : பிப் 02, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரிய காலாப்பட்டு கடலில் கழிவு நீர் குழாய் பதித்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் மூன்று மாதத்திற்குள் அகற்ற உத்தரவிட்டுள்ளது.

பெரிய காலாப்பட்டு கடலில் உள்ள கழிவு நீர் குழாய்கள், மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி வருவதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இரண்டு உத்தரவுகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் உறுப்பினர் செயலர் பிறப்பித்தார்.

அதில், கழிவுநீர் குழாய்களை அகற்றாததால் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச்சங்கம் சார்பில், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு மனித உரிமை ஆணையம், கடலில் உள்ள கழிவுநீர் குழாய்களை வெளியே எடுக்க உத்தரவு பிறப்பித்தது. இதன்பின்பும் கழிவுநீர் குழாய்களை ஓராண்டு காலமாக வெளியே எடுக்காமல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.

அதையடுத்து காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில், அதன் நிறுவனத் தலைவர் குமார், சென்னை தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் கோபால் மூலம் மனு தாக்கல் செய்தார்.

மனுவினை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வந்தது. கடந்தாண்டு மார்ச் 19ம் தேதி ஸ்கூபா டைவர் அரவிந்த் மற்றும் சந்துரு ஆகியோர் கடலுக்கு அடியில் ஆய்வு செய்து குழாய் இருப்பது கண்டுபிடித்து தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் மூலம் கடலுக்கு அடியில் 7.4 மீட்டர் உயரம் மற்றும் அகலத்தில் ஒரு கான்கிரீட், முக்கோண வடிவகல், அதனுடன் இரும்பு சேனல், அதனுடன் கயிறு, மீன்வலைகள், சிக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில் அண்மையில் பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்தியகோபால் கோர்லபதி ஆகியோர் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

அதில், கடலில் உள்ள குழாய்கள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள முக்கோண வடிவகல், அனைத்தையும் மூன்று மாத கால அவகாசத்திற்குள் வெளியே எடுத்து அகற்ற வேண்டும், குழாயில் வலை சிக்கி பாதித்த மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை மூன்று மாதத்தில் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை பெற்று தர வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இது குறித்த நடவடிக்கை விவரத்தை வரும் ஏப்., 7 ம் தேதி சமர்ப்பிக்க அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த முழு தீர்ப்பும் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us