/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் போராட்டம்
/
தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 14, 2026 04:36 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை யில் கடந்த 26 ஆண்டுகளாக ப ணியாற்றி வரும் தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஆணையை அமல்படுத்த வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதேசி மில் அருகே நடத்த போராட்டத்திற்கு ஊழியர்கள் சங்கத் தலைவர் சாரா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். மூத்த தொழிற்சங்கத் தலைவர் முருகன் கண்டன உரையாற்றினார்.
இதில், வெற்றிவேல், சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சீனுவாசன், ராமசாமி, கொளஞ்சியப்பன், விஜயகுமார், மதிவாணன், சி.பி.எம்., நிர்வாகிகள் ராமச்சந்திரன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

