/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவிலான மேலாண்மை கூட்டம்
/
தேசிய அளவிலான மேலாண்மை கூட்டம்
ADDED : பிப் 20, 2026 05:19 AM
புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி மேலாண்மைத் துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான மேலாண்மைக் கூட்டம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேலாண்மை துறைத் தலைவர் இந்துமதி தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், டீன் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகஇந்திய ரயில்வே தலைமை வணிக எழுத்தர் வெங்கடரமணன் கலந்து கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு கல்லுாரியின் டிரஸ்டி சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி மேலாண்மை துறை பேராசிரியர் கங்காலட்சுமி செய்திருந்தார்.

