/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு நோட்டீஸ்
/
தேசிய மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு நோட்டீஸ்
ADDED : மார் 06, 2024 03:14 AM

புதுச்சேரி : தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் சட்டப்பணிகள் ஆணையம் சார்பில், வரும் 9ம் தேதி, புதுச்சேரிஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இதில் வழக்காளிகள் சமாதானம் செய்ய முடியாத குற்ற வழக்குகளை தவிர தங்கள் வழக்குகளை சமரச முறையில் பேசி தீர்த்து கொள்ள மக்கள் நீதிமன்றத்தை அனுகலாம்.
அவ்வாறு தீர்வு காண விரும்புவோர், நேரில் அல்லது வழக்கறிஞர்கள் மூலம் தங்களின் வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் தெரிவித்து, மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணலாம். இது தொடர்பாக கட்டணம் இல்லா தொலைபேசி எண் 15100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, நீதிமன்ற வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் தலைமையில் நீதிபதிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினர்.

