ADDED : நவ 25, 2025 05:30 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனம் ஆங்கிலத் துறை சார்பில், இரு நாள் தேசிய பணி முகாம் கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
கல்லுாரி இயக்குநர் கோச்சடை தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள் பினு ஜகாரியா, மார்க்ஸ், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன ஆராய்ச்சியாளர் வினோத், பேராசிரியர் செல்வின், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் வஜ்ரவேலு ஆகியோர் மொழிபெயர்ப்பு கோட்பாடுகள், நடைமுறை பயிற்சிகள், தற்போதைய ஆராய்ச்சி திசைகள் குறித்து பேசினர்.
ஆங்கிலத்துறை தலைவர் பழனிசாமி, உதவி பேராசிரியர் மேரி ஜோசாபின் அருணா, ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் இரண்டு நாள் முகாமில் ஆராய்ச்சி மாணவிகள், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
