sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இயற்கை சுற்றுலா பூங்கா கவர்னர் பார்வையிட்டார்

/

இயற்கை சுற்றுலா பூங்கா கவர்னர் பார்வையிட்டார்

இயற்கை சுற்றுலா பூங்கா கவர்னர் பார்வையிட்டார்

இயற்கை சுற்றுலா பூங்கா கவர்னர் பார்வையிட்டார்


ADDED : பிப் 10, 2025 06:18 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' திட்டத்தின் கீழ் இயற்கை சுற்றுலா பூங்காவில் மரக்கன்று நட்டார். பின்னர். மியாவாக்கி பூங்காவை உருவாக்கி பராமரித்து வருபவர்களை சிறப்பித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அங்கு சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் கீழ் கையொப்பமிட்டார்.

மேலும், பூங்காவைநல்ல முறையில் பராமரிக்கவும், புதுச்சேரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இது போன்ற குறுங்காடுகள் பலவற்றை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்று ரோட்டரி சங்கத்தினரை கேட்டுக் கொண்டார்.

சங்கத்தின் தலைவர் வினோத் ஷர்மா, செயலர் பிரகாஷ், திட்டத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us