ADDED : அக் 28, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திய கடற்படை தமிழ்நாடு, புதுச்சேரி கடல் பகுதி பிரிவின் சார்பில், கடற்படை சிம்பொனி இசைக் குழுவின் நிகழ்ச்சி ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்திய கடற்படை சிம்பொனி இசை குழுவினருக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கடற்படை உயர் அதிகாரிகள், புதுச்சேரி அரசு செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.