ADDED : அக் 29, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: போதையில் தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி மொட்ட தோப்பு, ஆர்.வி., நகரை சேர்ந்த, ரவிகாந்த ஜான் மேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த பரத் இருவரும் மது போதையில், நேற்று முன்தினம், ஆர்.வி., நகரில் நின்று கொண்டு அவதுாறாக பேசி கொண்டிருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்த, சேர்ந்த மணிகண்டன், மனைவி ராணி, 32; அவர்களை தட்டி கேட்டார்.
அதில், ஆத்திரமடைந்த, இருவரும் சேர்ந்து, ராணியை, சுத்தியால் தலையில் தாக்கினர்.
காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து, ரவிகாந்த ஜான் மேரி உட்பட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.