/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
/
விளையாட்டு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
விளையாட்டு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
விளையாட்டு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 15, 2026 07:47 AM
புதுச்சேரி: விளையாட்டு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரிய காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடியில் விளையாட்டு சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
கவுரவ தலைவராக சீனிவாசன், தலைவராக முத்துகுமரன், துணை தலைவராக ராஜ்குமார், பொது செயலாளர் சங்கர், இணை செயலாளர் சுதாகர், பொருளாளர் ராஜேஷ்குமார், இணை பொருளாளராக கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விளையாட்டு உடற்தகுதி ஆலோசகர்களாக உதயசந்திரன், சட்ட ஆலோசகராக பிரசாந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக காசி விசுவநாதன், வேல்முருகன், முரளிகுமார், சதீஷ்குமார், ஜி.சக்திவேல், சதீஷ், ரவிபிரகாஷ், விநாயகமூர்த்தி, டி.சக்திவேல், பாவாடைராயன், பாலமுருகன், முரளிதரன், பிரசன்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் இளைஞர் நலனுக்காக பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். விளையாட்டு உடற்தகுதிக்கான முகாம்களை நடத்த வேண்டும்.
போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

