ADDED : ஜன 02, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
இ.சி.ஆர்., சாலை பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று 1ம் தேதி காலை 6:00 கொடியேற்றத்துடன் துவங்கியது. 6:30 மணிக்கு சிறப்பு தரிசனம் அதை தொடர்ந்து, 8:30 மணி அபிேஷகம் நடந்தது.
11:30 மணிக்கு பல்லக்கு உற்வசமும், பகல் 12:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கமல சாயிபாபா கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

