/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் தடியடி
/
புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் தடியடி
ADDED : ஜன 02, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் நள்ளிரவை தாண்டியும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் உள்ளுர் வாசிகள் குவிந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு ஒருவருக்கொருவர் கை கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
இரவு 12.20 மணி கூட்டம் குறையாமல் இருந்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரை சாலையில் குவிந்த மக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
யாரும் கலைந்து செல்லாதததால் 12.35 மணியளவில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

