ADDED : அக் 06, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திரா நகர் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர்களுக்கான வண்ணம் மற்றும் நிபுன் பாரத் தின விழா நடந்தது.
தலைமையாசிரியர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சந்திரன் மாணவர்களின் திறன்களை பார்வையிட்டு பரிசுகள் வழங்கினார்.
ஆசிரியர்கள் சாரதா, தேவி, பாக்யஸ்ரீ, சக்தி பிரியா, சபரிநாதன், விமலி, தமிழ் மலர், ஜெயசுதா, சாமுண்டீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்மழலையர் மாணவர்கள் வண்ண உடைகளில் பொம்மைகள், வரைபடங்கள், பழங்கள், இனிப்புகள் என பல வகைகளில் காட்சிப்படுத்தி இருந்தனர். அனைத்து மாணவர்களுக்கும் வண்ணமெழுகு, புத்தகங்கள் மற்றும் பென்சில் வழங்கப்பட்டன.