/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னையில் கடத்திய லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு; வட மாநில வாலிபர் கைது
/
சென்னையில் கடத்திய லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு; வட மாநில வாலிபர் கைது
சென்னையில் கடத்திய லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு; வட மாநில வாலிபர் கைது
சென்னையில் கடத்திய லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு; வட மாநில வாலிபர் கைது
ADDED : அக் 13, 2024 07:55 AM

உளுந்துார்பேட்டை : சென்னையில் கடத்திய லாரியை உளுந்தூர்பேட்டையில் போலீசார் மீட்டு, கடத்திய வாலிபரை கைது செய்தனர்.
சென்னை, கொளத்துார் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்குமார். இவர், அப்பகுதியில் பழனிக்குமார் என்ற பெயரில் இரும்பு மற்றும் சிமென்ட் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஆயுத பூஜைகாக லாரியை படைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது லாரியை காணவில்லை. இதுகுறித்து தனுஷ்குமார், புழல் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் டோல்கேட் பாஸ்டேக் மூலம் விக்கிரவாண்டி டோல்கேட்டை லாரி கடந்து சென்றது தெரியவந்தது. அதன்பேரில் உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே போலீசார் லாரியையும், லாரியை கடத்திய நபரையும் நேற்று காலை 11:00 மணியளவில் மடக்கிப் பிடித்து லாரியை மீட்டனர்.
விசாரணையில், லாரியை கடத்தி வந்தவர் உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டம், சாய்கஞ்சோரா பகுதியைச் சேர்ந்த ஜூனுத்பிரகாஷ் மகன் சத்தியபிரகாஷ், 20; என, தெரிந்தது.
மேலும், சத்தியபிரகாஷ், கடந்த ஒரு ஆண்டாக தனுஷ்குமாரிடம் வேலை செய்துவந்த நிலையில், நேற்று லாரியை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சத்தியபிரகாஷை கைது செய்த போலீசார், புழல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.