sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சைக்கிள் திருடிய வடநாட்டு பெண் கைது

/

சைக்கிள் திருடிய வடநாட்டு பெண் கைது

சைக்கிள் திருடிய வடநாட்டு பெண் கைது

சைக்கிள் திருடிய வடநாட்டு பெண் கைது


ADDED : மார் 31, 2025 07:43 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; புதுச்சேரியில் விலை உயர்ந்த சைக்கிள் திருடிய வடநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, வெங்கட்டா நகரில் 20 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்ற, அவரது தாய்க்கு மருந்து வாங்க சைக்கிள் தரும்படி கேட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவர் சைக்கிளை அந்த பெண்ணிடம் தந்துள்ளார்.

சைக்கிளை எடுத்து சென்ற அந்த பெண் திருப்பி வரவில்லை. அப்பெண் சைக்கிள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மாணவரின் பெற்றோர் பெரியக்கடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். ஆய்வில் சைக்கிள் திருடியது வடநாட்டு பெண் சுஷ்மிதா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கோவிந்த சாலையில் இருந்த சுஷ்மிதாவை கைது செய்து, அவரிடம் இருந்த சைக்கிளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us