sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு 

/

 வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு 

 வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு 

 வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு 


ADDED : டிச 26, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் பணிபுரிந்து மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் தங்களுக்கு வேலை வழங்கிட கோரி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின், போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து அ.திமு.க., மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;

கீழ்நிலை பணியில் உள்ளவர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

புதுச்சேரி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.உழவர்கரை நகராட்சியில் பணியின் போது மரணம் அடைந்த ஊழியர்களின், வாரிசுதாரர்களுக்கு ஆண்டுதோறும் உள்ளாட்சித்துறை பணி வழங்கி வருகிறது.

ஆனால், புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப் பது சட்டத்திற்கு புறம் பான செயலாகும். வாரிசுதாரர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக பணி வழங்கிட வேண்டும். போராட்ட களத்தை மாற்றம் செய்து சட்டசபை எதிரில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் போராட்டத்தை மாற்றிட வேண்டும்.

வாரிசுதாரர்களின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க., துணை நிற்கும்' என்றார். தொடர்ந்து, அவர், சங்க நிர்வாகிகளை முதல்வரிடம் அழைத்து சென்று உள்ளாட்சி நிர்வாகத்தில் பணி வழங்கிட வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us