என்.ஆர்.காங்., வேட்பாளர் எழில் நகரில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் எழில் நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 10:57 PM

வில்லியனுார்;வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார், எஸ்.எஸ்.நகர், எழில் நகர் பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார்.
வில்லியனுார் தொகுதி என்.ஆர். காங்., வேட்பாளர் ரவிக்குமார் நேற்று எஸ்.எஸ்.நகர் மற்றும் வி.மணவெளி அருகே உள்ள எழில் நகர் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று 'ஜக்கு' சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர், முதல்வர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் என்.ஆர்.காங்., ஆட்சி அமைக்க ஜக்கு சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். ரங்கசாமி முதல்வரானல் தான், நேர்மையான முறையில் அரசு வேலை கிடைக்கும். முதியோர் உதவித்தொகை மேலும் உயர்த்தி வழங்குவார். அனைத்து திட்டங்களும் தடையின்றி தொடர மீண்டும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு, ஜக்கு சின்னத்தில் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொண்டார்.
