என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் ஏம்பலம் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் ஏம்பலம் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 05:44 AM

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் (தனி) தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் கோர்க்காடு, குடியிருப்புபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'முதல்வர் ஆசியுடன் ஏம்பலம் தொகுதியை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து மாநிலத்திலேயே வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்றுவேன்.
கோர்க்காடு கிராமத்தில் நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் விடுபட்ட சாலை பணிகளை செய்து தருவேன்.
புதிதாக அமைக்கப்பட்ட நகரத்திற்கு சாலை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தருவேன்.
மாநிலத்தில் நலத்துறை சார்பில், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை தொடர்ந்து உயர்த்தி வழங்கிட மக்கள் முதல்வரின் கரங்களை வலுப்படுத்த கோரினார்.
நேற்று மாலை குடியிருப்புபாளையத்தில் ஓட்டு சேகரித்தார்.
