ADDED : அக் 29, 2024 06:26 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்துரத்தின அரங்க நினைவு பள்ளியில் பேட்ரிக் பள்ளி என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.
முத்துரத்தின அரங்க பள்ளி நிர்வாக அதிகாரி சுந்தரராஜன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சிறப்புரையாற்றினார். முகாமில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேட்ரிக் பள்ளி தாளாளர் பிரடெரிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னாள் திட்ட அலுவலர் இளவழகன், மீனாட்சி, கேஷவ், ேஷாபனா , திட்ட அலுவலர் ஆரோன் ஆல்பர்ட் இமானுவேல், பள்ளி திட்ட அலுவலர்கள் ஹேமந்த், இளங்கோ, அருணா, வனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
