ADDED : அக் 16, 2024 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் தில்லைக் கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் வரவேற்றார். மாநில என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
முதல்நாள் முகாமில் சிவன் கோவில் வளாகத்தினை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
விரிவுரையாளர் லதா நன்றி கூறினார்.