/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்
/
கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்
ADDED : பிப் 07, 2026 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மாபுரி, கலைமகள் நகரை சேர்ந்தவர் முருகவேல் மகள் மோகனப்பிரியா,19; நர்சிங் மாணவி. இவர் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மோகனப்பிரியாவை தேடிவருகின்றனர்.

