ADDED : ஜன 02, 2026 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
உறுவையாறு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், 39, என்பவர் மது போதையில் மங்கலம் - உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

